பெரு நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Date:

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று, வெள்ளிக்கிழமை, தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பான United States Geological Survey (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதேபோல, கடற்கரையின் சில பகுதிகளில் 1 முதல் 3 மீற்றர் உயரம் வரையுள்ள அலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பின்னர் அது எச்சரிக்கையை திரும்பப் பெற்றுவிட்டது. இப்போது, நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பெரு நாட்டில் சுமார் 33 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...