மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துவிட்டார்: ஜனாதிபதி சக்வேரா அறிவிப்பு

Date:

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு  புறப்பட்டது.

ஆனால், 10:02 மணிக்கு திட்டமிடப்பட்டபடி Mzuzu விமான நிலையத்தில் விமானத்தை தரையிறங்க முடியவில்லை.

இதனால் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தலைநகருக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால், விமானத்தின் தொடர்பு ரேடாரில் இருந்து விலகிச் சென்றதால், விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் விமானிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

“நான் மிகவும் வருந்துகிறேன். இது ஒரு சோகமான நிகழ்வு என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வருந்துகிறேன்.

தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் சிக்கன்காவா வனப்பகுதியின் அருகே விமானத்தை கண்டுபிடித்துள்ளனர்.

விமானம் முற்றிலும் அழிந்துள்ளது. பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.” என சக்வேரா, கூறியுள்ளார்.

மலாவியில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இந்தப் பின்புலத்திலேயே விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...