மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப்  பயணித்த அஞ்சல் ரயில் சேவையே இவ்வாறு கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் செல்லும் இரண்டு குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ரயிலினை தடமேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...