மல்வானை நகரம் மூழ்கியது:கொழும்பு உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Date:

களனி கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், மல்வானை நகரம் நீரில் மூழ்கியுள்ளது.

வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது,

அத்துடன், கொழும்பு – அவிசாவளை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்கள் மாத்திரம் செல்ல முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி எஹலியகொடவில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் 427.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், இதே காலப்பகுதியில் இங்கிரிய ஹல்வத்துர தோட்டத்தில் 348.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியில் 283.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் அதேவேளை சாலாவ பிரதேசத்தில் 280.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...