மேன்முறையீடு செய்ய தயாராகும் ஹிருணிகா!

Date:

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய ஆலோசனைகளை நடத்த தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...