“மஹ்ரூப் மொஹிடீனின் மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்” முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா இரங்கல்

Date:

 முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா வெளியிட்டுள்ள இரங்கல்

‘நல்வழி’ தொடர் நிகழ்ச்சியில் மஹ்ரூப் மொஹிடீனின் குரலில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சித் தொகுப்பு நாளாந்தம் வானொலி முஸ்லிம் சேவையில் மனதுக்கு இனிமை தரக்கூடியதும் ஆன்மீக சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமையும். அவர், பல சிறந்த ,தமிழ் நாடகங்களையும் தயாரித்துள்ளதுடன் ஆரம்பகாலங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

முஸ்லிம் சேவையில் அவருடன் இணைந்து செய்த ‘கருத்துக்களம்’ நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தமானவை, அமைதியானவரும் ஆர்ப்பாட்டமில்லாதவருமான அவர் , வானொலித் துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.

அவரது மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்.

இதேவேளை அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகையின் பின் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...