“மஹ்ரூப் மொஹிடீனின் மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்” முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா இரங்கல்

Date:

 முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா வெளியிட்டுள்ள இரங்கல்

‘நல்வழி’ தொடர் நிகழ்ச்சியில் மஹ்ரூப் மொஹிடீனின் குரலில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சித் தொகுப்பு நாளாந்தம் வானொலி முஸ்லிம் சேவையில் மனதுக்கு இனிமை தரக்கூடியதும் ஆன்மீக சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமையும். அவர், பல சிறந்த ,தமிழ் நாடகங்களையும் தயாரித்துள்ளதுடன் ஆரம்பகாலங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

முஸ்லிம் சேவையில் அவருடன் இணைந்து செய்த ‘கருத்துக்களம்’ நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தமானவை, அமைதியானவரும் ஆர்ப்பாட்டமில்லாதவருமான அவர் , வானொலித் துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.

அவரது மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்.

இதேவேளை அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகையின் பின் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...