“ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு” பழமொழி மோடிக்கு முழுமையாக பொருந்தும்: மஜக தலைவர்

Date:

‘ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு’ பழமொழியைப் போல மோடி  ஆட்சி தாக்குபிடிப்பது கடினம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியதற்காக இம்மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்து எழுச்சிமிகு பரப்புரை செய்த தமிழக முதல்வர்  தளபதியார் ஸ்டாலின் அவர்களை நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

அவருடன் பொதுச்செயலாளர் மௌலா. நாசர், பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ ஆகியோரும் உடன் சென்றனர்.

அப்போது தேர்தல் முடிவுகள் குறித்தும், நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் முதல்வருடன் மஜக தலைவர் அவர்கள் உற்சாகமாக கலந்துரையாடினர்.

அதன் பிறகு வெளியே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தலைவர் அவர்கள்இ முதல்வரின் வெற்றி மாலையில் 40 முத்துக்கள் ஜொலிப்பதாக நாங்கள் கூறியிருந்ததை இப்போதும் அவரிடம் நினைவூட்டினோம் என்று கூறினார்.

என்.டி கூட்டணிக்கு நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் வேகத்தடையாக இருப்பார்கள். ‘ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு’ இந்த பழமொழி மோடிக்கு இப்போ முழுமையா பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...