இம்முறை ஹஜ் கடமைகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது: அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி மினாவிலிருந்து…

Date:

ஹஜ் கடமைகளுடைய அனைத்து வணக்க வழிபாடுகளும் இன்றோடு நிறைவுபெறுகின்ற நிலையில் புத்தளத்திலிருந்து சித்தீக் ஹஜ் டிரவல்ஸ் சார்பாக வழிகாட்டியாக சென்றிருக்கின்ற அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்கள் எமக்கு வழங்கிய செய்தி.

சுமார் 40 ஹாஜிகளோடு கடந்த மாதம் 23ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்து புனித மக்காவிலும் மதீனாவிலும் சில நாட்களை கழித்து விட்டு புனித ஹஜ்ஜினுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக “அய்யாமுல் ஹஜ்” என்று சொல்லக்கூடிய துல்ஹஜ் பிறை 8ஆம் நாள் முதல் இதுவைரையிலும் மினா, அரபா முஸ்தலிபா, போன்ற இடங்களிலும் ஹஜ்ஜினுடைய கிரியைகளையும் வாஜிபான கிரியைகளையும் நிறைவேற்றி வருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் இன்று ஹஜ்ஜினுடைய அமல்களிலிருந்து முழுமையாக நாங்கள் விடைபெற்று விடுவோம்.

நாட்டிலிருந்து வந்ததிலிருந்து எங்களுக்கு தேவையான ஹோட்டல், தங்குமிடம், உணவு, இன்னோரன்ன எல்லா வசதிகளையும் எமது நிறுவனம் சிறப்பாக செய்து தந்துள்ளது.

நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நுஃமான் அவர்கள் ஹாஜிகளுக்கு இரவு பகலாக தியாகம் செய்து தன்னையே அர்ப்பணித்து அவர்களுக்குத் தேவையானவற்றை சிறப்பாக செய்து வருகிறார் என்பதற்கு நானும் என்னுடன் வருகைத்தந்த ஹாஜிகளும் சாட்சி.

சித்தீக் டரவல்ஸ் ஊடாக ஹாஜிகள் நீண்ட காலமாக ஹஜ்ஜினுடைய உம்ராவினுடைய பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிறுவனத்தினுடைய அர்ப்பணிப்பும் சேவையும் இந்நிறுவனத்தில் பயணித்த மக்களுடைய துவாவும் நிறுவனத்துடைய வளர்ச்சிக்கு காரணம் என்று நாங்கள் கூறலாம்.

மென்மேலும் இந்நிறுவனம் ஹாஜிகளுக்கு நல்ல பல பணிகளை செய்யவேண்டும் என துஆ செய்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...