இலங்கையின் முதல் பெண் மாலுமி நயோமி அமரசிங்க!

Date:

இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கீகாரத்தை நயோமி அமரசிங்க என்பவர் பெற்றுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

ஊடகவியலாளராக வர ஆசைப்பட்ட அவர், வேலைத் தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி மஹாபொல துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அகடமியில் தனது பயிற்சியை நிறைவுசெய்தார்.

இதனையடுத்து கார்னிவல் குரூஸ் லைனில் பணிபுரிந்த அவர்,உலகம் முழுவதும் பயணம் செய்ததுடன், பல நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார்.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் பாலினத் தடைகளைத் தகர்த்து, இன்று ஒரு அதிகாரியாக மாறியுள்ளார்.

இந்நிலையில்  captain தர நிலைக்கு உயர்வதே தனது இலக்கு என நயோமி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...