ஈத் பெருநாளன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட தனது மகனை கட்டியணைத்துக்கொள்ளும் பலஸ்தீன மருத்துவர்

Date:

சர்வதேச தந்தையர் தினத்துடன் இணைந்த ஈத் அல் அதா பெருநாளான நேற்று (16) காசா பகுதியிலுள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட தனது மகனின் உயிரற்ற உடலைப் பிடித்துக் கொண்டு பலஸ்தீனிய மருத்துவர் அழும் காட்சி மனதை உருக்கச் செய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலஸ்தீனியர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்.

இறந்த குழந்தைகளில் பலஸ்தீன மருத்துவரின் குழந்தையும் அடங்குகின்றது.

எவ்வாறாயினும் காசா பகுதியில் இஸ்ரேல் தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்இ தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 37, 337 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 85,299 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...