ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த மீடியா நைட்..!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று தெஹிவளை ‘ரோஸ்வூட் சிலோன்’ வரவேற்பு மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது.
‘மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டிலுள்ள அச்சு, இலத்திரனியல், டிஜிட்டல், மற்றும் சமூக ஊடகங்களில் ஊடகப்பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஊடகக்குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ‘ஜம்இய்யா கடந்து வந்த பாதை’ அறிமுகக் காணொளியாகத் திரையிடப்பட்டது.

ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ‘ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கு விதிகள்’ தொடர்பிலும் ‘ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யா விடுக்கும் செய்தி’ எனும் தலைப்பில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியும் உரை நிகழ்த்தினார்கள்.

5 ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு 15 நிமிட அவகாசம் வழங்கப்பட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி ஆகியோரால் பதில்கள் வழங்கப்பட்டன.

இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச்செயலாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...