மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 8139 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 11,048 ஆகும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.