சர்வ ஜன பலய கூட்டணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்: பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

Date:

விமல் வீரவன்சவை மையப்படுத்திய சர்வ ஜன பலய கூட்டணி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதாகவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றமாக ‘சர்வ ஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் குழு தனது கூட்டணி என்று கூறிய அவர், மற்ற அனைத்து கட்சிகளும் வலதுசாரி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் அதனை கடைப்பிடிப்பதாகவும், தமது கூட்டணி மக்களுக்கு தனித்துவமான மாற்றீட்டை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை விரைவில் ஆரம்பிக்க சர்வ ஜன பலய கூட்டணி தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...