சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுத் தகவல் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

3,527 பரீட்சை மத்திய நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 65,331 தனியார் விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...