சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுத் தகவல் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

3,527 பரீட்சை மத்திய நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 65,331 தனியார் விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...