ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைப்பு!

Date:

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 0-30 அலகு ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுககள் 50 ரூபாயில் இருந்து 30 ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் ‘மின் நிலையத்தில் பாரிய மாற்றத்திற்காக’ சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், முற்றிலும் புதிய மின் நிலையத்துக்கான சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஆதரவு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் ஏனையோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...