தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

Date:

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக  அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும் குறித்த ஒவ்வாமையானது தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குழந்தைகளுக்காக கொள்வனவு செய்யப்படும் சவர்க்காரத்தின் தர நிர்ணயம் தொடர்பாக அதிக அவதானம் செலுத்துமாறு அவர் பெற்றோருக்கு வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...