தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்: விசேட வசதிகள் ஏற்பாடு

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பொசன் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பொசன் வாரத்தில் மூடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடசாலைகள் வரும் 20ம் திகதி முதல் 23ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...