தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்: விசேட வசதிகள் ஏற்பாடு

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பொசன் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பொசன் வாரத்தில் மூடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடசாலைகள் வரும் 20ம் திகதி முதல் 23ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...