தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள், பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வாகனங்கள் குறித்த தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கான விசேட படிவமும் வெளியிடப்பட்டுள்ளதாகவும்  ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...