நாளை மேலதிக பஸ் சேவை: போக்குவரத்து அமைச்சு

Date:

ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை (10) மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் (NTC) இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 06ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் இந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் எந்த அதிகாரிகளும் கலந்துரையாடுவதற்கு முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவிருந்த 6 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளின் எண்ணிக்கை 155 ஆக பதிவாகியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...