காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் மினா அரண்மனையின் ரோயல் கோர்ட்டில் வருடாந்த ஹஜ் வரவேற்பு விழாவின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அரச தலைவர்கள், உயர் அதிகாரிகள், முஸ்லிம் பிரமுகர்கள், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரின் அதிதிகள், அரச நிறுவனங்களின் அதிதிகள் மற்றும் இந்த ஆண்டு ஹஜ் கடமையாற்றிய பிரதிநிதிகள் மற்றும் யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.
‘நாங்கள் ஈத் அல்-ஆதாவைக் கொண்டாடும் போது, காசாவில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் அவசரமாக கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை முன்மொழியும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை இளவரசர் இதன்போது எடுத்துரைத்தார்.
பலஸ்தீன மக்களுக்கு சவுதி அரேபியாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன் காஸாவில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.