பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் புத்தளத்தில் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ், அவர்கள்  கடந்த 23 ஆம் திகதி முஸ்லிம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உள்ளூர் குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள், கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கணினிகள் ஆகியவற்றையும் வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் கல்விக் கனவுகளைத் தொடர உதவுவதற்கு பாகிஸ்தான் முழுமையாக உதவும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, நாடளாவிய ரீதியில் தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது.

அல்லாமா இக்பால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 480 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டதாரி, முதுகலை மற்றும் கலாநிதி துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...