அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

Date:

இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இது இடம்பெற்றுள்ளது

அதன்படி மஹவ ஓமந்த திட்டத்தின் நான்கு கட்டங்களின் கீழ், இந்திய கடன் திட்டத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத பாதையின் தூரம் 1.8 கிலோமீற்றர் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை 220 மில்லியன் ரூபாவாகும்.

இதில் இரண்டு பாலங்கள் அடங்கும் என்றும் மற்றும் மின்தலயா ரயில் நிலையம், மிஹிந்தலை சந்தி துணை நிலையம், சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...