புதிய காத்தான்குடி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி : காஸா சிறுவர் நிதியத்துக்கு நிதி நன்கொடை!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு இன்று விஜயம் செய்தார்.

இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்துக்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல், ஒரு கோடியே 7 இலட்சத்து 69,417 ரூபாய் (10,769,417) நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த பள்ளிவாசலில் இன்று   நடைபெற்ற விசேட பிரார்த்தனையின் பின்னர், காஸா நிதியத்துக்கான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி சாஹீர் மௌலானா ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பிரமுகர்கள் உலமாக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...