மத்திய வங்கிக்கு துணை ஆளுநராக தாசிம் நியமனம்

Date:

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம்  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோர் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய துணை ஆளுநர்கள் முறையே ஜூன் 20 மற்றும் ஜூன் 24 முதல் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கி ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டபடி, நிதி அமைச்சரினால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏ. ஏ.எம்.தாசிம் இலங்கை மத்திய வங்கியில் (CBSL) 31 வருடங்களுக்கும் மேலாக வங்கி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலில் சேவையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...