முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இலங்கை திட்டம்

Date:

இலங்கைக்கும் (Sri Lanka) சவூதி அரேபியாவிற்கும் (Saudi Arabia) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் (Riyadh) நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் போது, முதலீடு குறித்து முக்கிய கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயற்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டினை திறமையான செயல்முறைகளுக்கு அமைய முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...