முறிந்து விழும் மரங்கள் தொடர்பில் நிலத்தடி தன்மையை ஆராய தீர்மானம்

Date:

கொழும்பில் முறிந்து விழும் அபாய நிலையில் இல்லாத மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மை என்பன தொடர்பில், புதிய ஆய்வொன்றை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் கொழும்பில் அண்மைக்காலமாக முறிந்து வீழ்ந்த பெரும்பாலான மரங்கள், முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மாத்திரம் 500 மரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 200 பழமையான மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதுவரையான காலப்பகுதியில் அவற்றில் 160 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏனைய ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குழாய் நீர் பொருத்துதல் மற்றும் ஏனைய பணிகளின் போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்படும் என்பதால் அவை குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் உதவியுடன் அதற்கான ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் தேவைப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...