மைத்திரிக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக  மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒரு தலை பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு  மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இந்த வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திரவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன, கடந்த மே 12 அன்று  சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...