2030 இல் உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்

Date:

உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் மனநல வைத்தியர் யோகா அந்தோனி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இன்று (18) இடம்பெற்ற புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறாக அதிகரித்து வருகின்ற போதிலும், விழிப்புணர்வினால் அதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆண்களுக்கு பொதுவாகக் காணப்படும் வாய்ப் புற்றுநோய் வெற்றிலை உண்பதினால் ஏற்படுவதாகவும், புகைப்பிடிப்பதினால் நுரையீரல் புற்றுநோய் உருவாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டியே நோயாயை கண்டறிவதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...