நாடளாவிய ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணியிலிருந்து விடுபடுவார்கள் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கண்டி, வடமத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் இன்று அதே தொழில் நடவடிக்கை இடம்பெறவுள்ளது

கல்வி மற்றும் கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் வகையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கம் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறையின் பின்னர் இன்று முதல் அரச பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...