நாடளாவிய ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணியிலிருந்து விடுபடுவார்கள் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கண்டி, வடமத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் இன்று அதே தொழில் நடவடிக்கை இடம்பெறவுள்ளது

கல்வி மற்றும் கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் வகையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கம் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறையின் பின்னர் இன்று முதல் அரச பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...