நாடளாவிய ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணியிலிருந்து விடுபடுவார்கள் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கண்டி, வடமத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் இன்று அதே தொழில் நடவடிக்கை இடம்பெறவுள்ளது

கல்வி மற்றும் கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் வகையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கம் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறையின் பின்னர் இன்று முதல் அரச பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...