அருள் மழையில் நனையும் ஹாஜிகள்:மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற ஒர் அருமையான காட்சி

Date:

துல் ஹஜ் 11ஆவது நாளான இன்று மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் அங்கு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

அல்லாஹ்வின் அருள் கடும் உஷ்ணத்ததோடு ஹஜ் செய்கின்ற மக்களுக்கு இறங்கிய ஒரு உணர்வை இந்த மழை ஏற்படுத்தியிருக்கிறது.

கஅபாவைச் சூழ தவாப் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற அந்த அருமையான காட்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது.

மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது இருக்கின்ற கடும் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் இது வரைக்கும் 20 பேர் வரை மரணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மக்காவில் மழை பெய்திருக்கின்ற செய்தி அங்கிருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகிருக்கின்றது.

கஅபாவை சூழ தவாப் செய்கின்ற மக்கள் மழையில் நனைந்தவாறு தங்களுடைய கடமையான தவாப் செய்கின்ற காட்சியானது அவர்கள் எவ்வளவு தூரம் அந்த உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு மழை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...