ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: விரிவான விசாரணைகளுக்கான புதிய குழு ஜனாதிபதியால் நியமனம்

Date:

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வவுணத்தீவு கொலை விவகாரத்துடன் எல்.டீ.டீ.ஈ அமைப்பினர் தொடர்பு பட்டிருந்தாக இராணுவ புலனாய்வுச் சபையினால் (DMI)அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளது.

இக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...