தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.பெரும்பாலான இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

அனர்த்தங்களினால் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 04 ஆகும். புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் அவிசாவளை மற்றும் முல்லட்டியான பகுதிகளில் பதிவாகியுள்ளன.

அவிசாவளை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், முலட்டியானவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 20 மற்றும் 27 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 78 வயதான ஆண், 29 வயதுடைய பெண் மற்றும் ஏழு வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

நேற்று (02ஆம் திகதி) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் 152 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...