பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் புத்தளத்தில் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ், அவர்கள்  கடந்த 23 ஆம் திகதி முஸ்லிம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உள்ளூர் குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள், கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கணினிகள் ஆகியவற்றையும் வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் கல்விக் கனவுகளைத் தொடர உதவுவதற்கு பாகிஸ்தான் முழுமையாக உதவும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, நாடளாவிய ரீதியில் தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது.

அல்லாமா இக்பால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 480 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டதாரி, முதுகலை மற்றும் கலாநிதி துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...