அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

Date:

இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இது இடம்பெற்றுள்ளது

அதன்படி மஹவ ஓமந்த திட்டத்தின் நான்கு கட்டங்களின் கீழ், இந்திய கடன் திட்டத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத பாதையின் தூரம் 1.8 கிலோமீற்றர் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை 220 மில்லியன் ரூபாவாகும்.

இதில் இரண்டு பாலங்கள் அடங்கும் என்றும் மற்றும் மின்தலயா ரயில் நிலையம், மிஹிந்தலை சந்தி துணை நிலையம், சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...