பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  இரண்டு நாட்களுக்கு சிறைக்கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்பு பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி பார்வையாளர்கள் வர வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...