மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப்  பயணித்த அஞ்சல் ரயில் சேவையே இவ்வாறு கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் செல்லும் இரண்டு குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ரயிலினை தடமேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...