முறிந்து விழும் மரங்கள் தொடர்பில் நிலத்தடி தன்மையை ஆராய தீர்மானம்

Date:

கொழும்பில் முறிந்து விழும் அபாய நிலையில் இல்லாத மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மை என்பன தொடர்பில், புதிய ஆய்வொன்றை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் கொழும்பில் அண்மைக்காலமாக முறிந்து வீழ்ந்த பெரும்பாலான மரங்கள், முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மாத்திரம் 500 மரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 200 பழமையான மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதுவரையான காலப்பகுதியில் அவற்றில் 160 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏனைய ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குழாய் நீர் பொருத்துதல் மற்றும் ஏனைய பணிகளின் போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்படும் என்பதால் அவை குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் உதவியுடன் அதற்கான ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் தேவைப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...