லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Date:

லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு கிலோ 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் வெள்ளை கௌப்பி 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும் சிவப்பு கௌப்பி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த அத்தியாவசியப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...