ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மகிந்த கஹந்தகம!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காகியிருந்தார்.

மேலும், அந்த காலப்பகுதியில் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் மகிந்த கஹந்தகம கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது மகிந்த கஹந்தகம, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...