கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 9.00 மணி முதல் நீர் வெட்டு

Date:

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொலன்னாவை, கடுவல நகரசபைக்குட்பட்ட பகுதிகள், முல்லேரியா, கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணி காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....