நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Date:

களனிவெளி தோட்ட முகாமைத்துவத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தின் பின்புலத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகினர்.

மேலும், நகர்த்தல் மனுவினை தாக்கல் செய்தே இம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...