சாவகச்சேரி விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

Date:

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் கடந்த 05.07.2024 அன்று அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் பொதுமக்கள் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த களவிஜயத்தில் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை அந்த கலந்துரையாடலிற்கான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளளது.

 

 

எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு பின்வருவோருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, செயலாளர் – சுகாதார அமைச்சு (Ministry of Health), கொழும்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – சுகாதார அமைச்சு, கொழும்பு, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – வடக்கு மாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடக்கு மாகாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் – யாழ்ப்பாணம், மருத்துவ அத்தியட்சகர் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...