ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு?

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும், தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் உயர்பீடத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத போதிலும், உச்ச சபை எதிர்க்கட்சித் தலைவருக்கே ஆதரவு வழங்குவதாகவும் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உச்ச சபையின் ஆதரவு கிடைக்கும் என தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...