துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

சமூக சேவைகளில் ஒத்துழைக்க துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகன் தலைமையில், சமூக சேவைகள் அமைச்சர் மஹினுர் ஓஸ்டெமிர் கோக்தாஸ் (Mahinur Ozdemir Goktas) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷம்மா பின்ட் சுஹைல் பின் ஃபரிஸ் அல் மஸ்ரூயி (Shamma bint Suhail bin Faris Al Mazrouei) ஆகியோர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரு நாட்டு அமைச்சகங்களும், அறிவு அனுபவம் மற்றும் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் வேலைவாய்ப்பிற்கான கொள்கைகளை உருவாக்குவது, ஊனமுற்ற நபர்களை சமூகத்தில் முழுமையாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்பதை உறுதிசெய்து, சுறுசுறுப்பான முதுமையை ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துருக்கி குடும்பம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சு , சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை ஆகியவை  இஸ்தான்புல்லில் உள்ள ஷேக் சயீத் குழந்தைகள் இல்ல வளாகத்தின் புனரமைப்பு, பராமரிப்பு  மேம்பாட்டிற்கு ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...