சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகவீன விடுமுறையில் பணிக்கு வருவதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
அதன்படி குறித்த சுகயீன விடுமுறையில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் சாத்தியம் இல்லையென அறியமுடிகிறது.