பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் கரிசணை!

Date:

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் பாரியளவில் வியாபித்துள்ளதால்,அமைதியைக் கொண்டுவருவதற்கு உரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களையும் அரசாங்க உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல்கலைகழகங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பங்களாதேஷிற்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...