பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் கரிசணை!

Date:

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் பாரியளவில் வியாபித்துள்ளதால்,அமைதியைக் கொண்டுவருவதற்கு உரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களையும் அரசாங்க உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல்கலைகழகங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பங்களாதேஷிற்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...