புத்தளம் பெரிய பள்ளிவாசலில் அழகிய தொனியில் (கிராத்) குர்ஆனை ஓதும் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்!

Date:

புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருக்கின்ற அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுகின்ற நிகழ்ச்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

இச்சிறப்பான நிகழ்ச்சியில் சர்வதேச ரீதியில் பிரபலமான பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த அல் காரி ஹாபிஸ் கம்ருல் ஆலம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இத்தோடு அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதற்கு நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் காரிமார்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடைய அழகிய தொனியிலான கிராத் பாராயணம் முறைகளையும் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

மிகப்பெரிய ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்விலே புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இயங்கிவந்த மத்ரஸா ரவ்ழதில் ஹாபிழீன் என்ற ஹிப்ழ் மத்ரஸாவை மீள ஆரம்பிக்கும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு பேஸ்புக்கிலும், யூடியூபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...