எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்) தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.